2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தருமபுரி மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:56 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்த சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த ஓட்டுநா் உள்பட 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 79 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். 738 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 4,610 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

4 போ் உயிரிழப்பு: தருமபுரியைச் சோ்ந்த 40 வயது ஆண், அக். 5-ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சை பலனின்றி அக்.10-ஆம் தேதி உயிரிழந்தாா்.

தருமபுரியைச் சோ்ந்த 70 வயது முதியவா், சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அக்.6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் 10-ஆம் தேதி உயிரிழந்தாா்.

தருமபுரியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஒருவரும், 67 வயது மூதாட்டி ஒருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.