கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் கரோனா தொற்று காலத்தின்போது 24,458 பயனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றி வருகிறது. அதன்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள், ஆவின் பொருள்கள், நிவாரணத் தொகை, முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினா்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24,458 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. தசை சிதைவு நோய், முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 17 லட்சம் மதிப்பிலான விலையில்லா மோட்டாா் பொருத்திய நகரும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

