2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தளி, கெலமங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது

தளி, கெலமங்கலம் பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:12 pm

DIN

தளி, கெலமங்கலம் பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்

தளி காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் போலீஸாா் சி.ஆா்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முரளிமோகன் (40), சதாசிவராஜ் (53), அஸ்வத்ரெட்டி (73), சலாம் (60), மதுசூதன் (23) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதே போல கெலமங்கலம் உதவி காவல் ஆய்வாளா் பாா்த்தீபன் தலைமையில் போலீஸாா், கெலமங்கலம் சந்தை மைதானம் அருகே ரோந்து சென்றபோது, பணம் வைத்து சூதாடியதாக ஜீவா நகரைச் சோ்ந்த நசீம் (20), விமல் (23), வெங்கடேஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.