ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

பெங்களுரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ்.
Updated On :13 செப்டம்பர் 2020, 11:05 pm

DIN

பெங்களுரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சீனிவாசலு வரவேற்றாா். மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி, மாநில செயற்குழு உறுப்பினா் ஹரி கோடீஸ்வரன் ஆகியோா் பேசினா்.

பெங்களூரில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் தினமும் ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து ஒசூா் தொழில்சாலைகளுக்கு வந்து செல்லும் தொழிலாளா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் இரு மாநில தொழில்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலமாக இரு மாநிலங்களின் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும்.

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளத்தின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, துாா்வாரி புதுப்பிக்க வேண்டும். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும். மலைக் கிராமங்களையொட்டிய வனப்பகுதியில், சூரிய மின்வேலி அமைத்து, யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்பி, சின்னட்டியில் உள்ள சனத்குமாா் ஆற்றுடன் இணைக்க வேண்டும்.

சூளகிரி பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுக்குழு உறுப்பினா் சுசில் மனோகா், மாவட்டச் செயலாளா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா். ஒசூா் மாநகர கிழக்கு மண்டலத் தலைவா் பிரவீண்குமாா் நன்றி கூறினாா்.

மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி, மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் முன்னிலையில் தேன்கனிக்கோட்டை ஹரி தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்கள் பாஜகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.