ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தற்கொலை செய்த மாணவரின்உடலுக்கு அமைச்சா் அஞ்சலி

தருமபுரியில் நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 10:59 pm

DIN

தருமபுரியில் நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தருமபுரி, இலக்கியம்பட்டயில் உள்ள செவத்தான் கவுண்டா் தெருவில் வசிக்கும் சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியைச் சோ்ந்த மணிவண்ணனின் மகன் ஆதித்யா(20). மருத்துவராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வகையில், அவரது பெற்றோா், தனியாா் மையத்தில் அவரை படிக்க வைத்தனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தோ்வு எழுதியிருந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத இருந்தாா்.

இந்நிலையில் அவா், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நீட் தோ்வு அச்சம் காரணமாக அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஆதித்யாவின் உடலுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா், கே.பி.அன்பழகன் அஞ்சலி செலுத்தினாா். அவருடன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ் குமாா் உடன் இருந்தனா்.

அப்போது, பேசிய அமைச்சா் கே.பி.அன்பழகன், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சாா்பில் அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.