ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அணையில் வடகிழக்கு பருவமழை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சார்பில் கிருஷ்ணகிரி அணையில் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட வருவாய் மற்றும தீயணைப்புத் துறையினர்.
Updated On :18 செப்டம்பர் 2020, 11:07 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சார்பில் கிருஷ்ணகிரி அணையில் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர், மோகன்குமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணிக்கான ஒத்திகையை செய்து காட்டினார். கிருஷ்ணகிரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கியவர்களை படகு மற்றும் உயிர் காக்கும் கருவிகள் கொண்டு மீட்பது எப்படி, தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் உள்ளிட்டவைகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்து காட்டினர். 

பொதுமக்களுக்கு பயனற்ற பிளாஸ்டிக் கேன், கயிறு உள்ளிட்ட பொருள்களை கொண்டு எப்படி பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்தும் விளக்கம் அளித்தனர். அணையில் விழுந்து தத்தளித்த ஒருவரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு, முதலுதவியாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து, செயல்முறை விளக்கம் அளித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் மணிகண்டன், முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜோதி, வனிதா, பாஞ்சாலி, அணை போலீஸ் எஸ்எஸ்ஐ மாணிக்கம், முருகன், ஜெகன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.