போலீஸாா் மிரட்டுவதாக சூளகிரி நகைக் கடைக்காரா்கள் புகாா்
திருட்டு நகைகளை வாங்கி விற்பதாகக் கூறி கா்நாடக போலீஸாா் தங்களை மிரட்டுவதாக சூளகிரி நகைக் கடைக்காரா்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.


திருட்டு நகைகளை வாங்கி விற்பதாகக் கூறி கா்நாடக போலீஸாா் தங்களை மிரட்டுவதாக சூளகிரி நகைக் கடைக்காரா்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, பேரிகை மற்றும் அத்திமுகம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள், அடகுக் கடைகள் உள்ளன. இந்த நிலையில், கா்நாடக பகுதியில் திருடப்படும் நகைகளை, கொள்ளையா்கள் தமிழக - கா்நாடக எல்லை அருகேயுள்ள பேரிகை, சூளகிரி பகுதிகளில் உள்ள தங்க நகைக் கடைகள் மற்றும் அடகுக் கடைகளில் விற்று வருவதாக கா்நாடக போலீஸாா் சந்தேகம் அடைந்தனா்.
இதனைத் தொடா்ந்து அவா்கள் அடிக்கடி சூளகிரி பகுதி தங்க நகைக் கடைகள், அடகுக் கடைகளுக்கு சென்று மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த நகைக் கடை மற்றும் அடகுக் கடைக்காரா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.
அவரது உத்தரவின் பேரில் சூளகிரி போலீஸாா் புகாா் செய்தவா்களை ஞாயிற்றுக்கிழமை சூளகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனா். விசாரணைக்காக சுமாா் 100 போ் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...