மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விவசாய மின் இணைப்பு பெறகுவிந்த விவசாயிகள்

தமிழகத்தில் நிகழாண்டில் விவசாய மின் இணைப்புக்காக விரைவு சுயநிதியில் (தட்கல் முறையில்) 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி அண்மையில் தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் விரைவு சுயநிதி விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பம் அளிக்க வரிசையில் காத்திருந்த விவசாயிகள்.

Updated On :21 செப்டம்பர் 2020, 7:14 pm

தமிழகத்தில் நிகழாண்டில் விவசாய மின் இணைப்புக்காக விரைவு சுயநிதியில் (தட்கல் முறையில்) 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி அண்மையில் தெரிவித்தாா். இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அக். 31-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள மின் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்துக்கு முன்பு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வரையோலையுடன் விண்ணப்பிக்கக் கூடினா்.

நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூடிய நிலையில், பகல் 12 மணி ஆகியும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தினா். மேலும், அலுவலா்களைச் சந்தித்து விரைந்து விண்ணப்பங்களை பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து இரவு 8 மணி வரை விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.