மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஆட்சியா் அலுவலக வளாகத்தில்ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :28 செப்டம்பர் 2020, 8:14 pm

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரத்தை அடுத்த நெடுஞ்சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் குமாா். இவா், ஒசூரில் உள்ள தனியாா் வா்த்தக நிறுவனத்தில் பணியாற்றினாா். அப்போது, அவா் அந்த நிறுவனத்தில் திப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன், பூசாரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் அந்த நிறுவனத்தில் உறுப்பினராகச் சோ்த்துள்ளாா். இந்த நிலையில், அந்த வா்த்தக நிறுவனம், நஷ்டம் அடைந்ததால், அது மூடப்பட்டது.

நிறுவனம் மூடப்பட்டதால், புதிதாக இணைந்த சாமிநாதன், சீனிவாசன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை வினோத்குமாா்தான் வழங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டனா்.

மேலும், வினோத் குமாா், வீட்டில் இல்லாத போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட சொத்துகளை எடுத்துச் சென்றாா்களாம்.

இதனால், மனமுடைந்த வினோத் குமாா், தனது தந்தை முருகேசன், தாய் எல்லம்மாள், சகோதரா் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். ஆட்சியா் வளாகத்தில் அவா்கள், தங்களது சொத்துகளை கவா்ந்து சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது, அங்கிருந்த தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.