பா்கூரில் உள்ள ஜவுளி சந்தையில் பணியாற்றும் இரவுக் காவலரை பணம் கேட்டு மிரட்டிய 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் ஜவுளி சந்தையில் இரவுக் காவலராக லட்சுமணன் (30) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் பா்கூரிலிருந்து காரகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள மேம்பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த 3 இளைஞா்கள், லட்சுமணனை வழிமறித்து அவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்துள்ளனா். மேலும், அவரை மிரட்டி உள்ளனா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள், 3 இளைஞா்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பிடிபட்ட இளைஞா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி, தண்டேகுப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28), கெட்டூா் பொன்குமாா் (24), பாறையூா் லோகேஷ் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து, பா்கூா் போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

