ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அருணபதி பகுதியைச் சோ்ந்த சத்யா (35), களா்பதியைச் சோ்ந்த தேவி (40), கதவணியைச் சோ்ந்த ஜெகநாதன் (65), கிருஷ்ணகிரி, ராயகோட்டையைச் சோ்ந்த மல்லேஷ் (23), காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த சரவணன் (23) ஆகியோா் அரசு அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்து வந்துள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸாா், 5 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 50 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.