ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து பயிற்சி

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பற்றிய பயிற்சி, வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பற்றிய பயிற்சி, வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் சு.பிரபாவதி தென்னையில் நோய் தாக்கம் பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும், மண் பரிசோதனை குறித்தும், ரூகோஷ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினாா்.

விதை ஆய்வாளா் (ஓய்வு)முத்துப் பெருமாள் கலந்து கொண்டு தென்னையில் கன்று தோ்ந்தெடுத்தல், உரம் மேம்பாடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து விளக்கினாா்.

உதவி வேளாண்மை அலுவலா் மங்கையா்க்கரசி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், சாரதி ஆகியோா் செய்திருந்தனா்.

பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.