2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கிருஷ்ணகிரி அருகே எருது உயிரிழப்பு: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கிருஷ்ணகிரி அருகே எருது உயிரிழந்த சம்பவம் விவசாயியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 5:45 am

DIN

கிருஷ்ணகிரி அருகே எருது உயிரிழந்த சம்பவம் விவசாயியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ளது செட்டிமாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயியான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார்.

இந்த எருது, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் எருது ஓட்டத்தில் பங்கேற்று வந்தது. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வந்த எருது நந்தி தேவா, பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. 

Story image

எனவே இந்த கிராம மக்கள் அந்த எருத்தை தங்களது அடையாளமாக கருதிவந்தனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட எருது நந்தி தேவா, ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது.

தகவலறிந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எருது வளர்ப்போர், உயிரிழந்த எருது நந்தி தேவாவின் உடலுக்கு மாலை மரியாதை செலுத்தி வருகின்றனர். 

Story image

எருது நந்தி தேவா உயிரிழந்த சம்பவம், செட்டிமாரம்பட்டி கிராமம் மட்டுமல்ல, எருது வளர்ப்போர் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.