விவசாயிகள் மீதான தாக்குதல் தேசத்திற்கான அவமானம்: சஞ்சய் ரெளத்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கான அவமானம் என சிவசேனை கட்சியின் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)

சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கான அவமானம் என சிவசேனை கட்சியின் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் கர்ணல் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில், பல விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் கூறியது:
விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தேசத்திற்கான அவமானம். இது வகையான தலிபானியர்களின் மனநிலையாக உள்ளது. இந்த அரசாங்கம் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கானது என்று எப்படி கூறுகிறார்கள்? என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...