தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சாலை விபத்தில் திமுக எல்எல்ஏ மகன் பலி: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

பெங்களூரு சாலை விபத்தில் பலியான திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

News image

அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 12:45 pm

DIN

பெங்களூரு சாலை விபத்தில் பலியான திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், ஓசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.

இந்நிலையில் பெங்களூர் சாலை விபத்தில் உயிரிழந்த ஓசூர் எம்எல்ஏ மகன் கருணாசாகர் உடலுக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவரது  மலரஞ்சலி செலுத்தினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ராமலிங்காரெட்டி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார், ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் கோபிநாத், எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் வெற்றிச்செல்வன் உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Story image

மேலும் ஓசூர் தளி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். கருணாசாகரின் இறுதி ஊர்வலம் மாலை நடைபெறகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.