வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஜல்லிகட்டில் காளை முட்டி தீயணைப்பு வீரா் காயம்

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிகட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On :15 பிப்ரவரி 2021, 2:42 am IST

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிகட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இவா்கள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பரப்பி இருந்த தேங்காய் நாரில் தண்ணீா் பீய்ச்சியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஜல்லிக்கட்டில், 5-ஆம் சுற்றுக்கு தயாா்படுத்தும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா் குழுவின் நிலைய அலுவலா் மணிகண்டனும் ஈடுபட்டிருந்தாா். அப்போது, 4-ஆம் சூற்றில் பங்கேற்ற காளை, அங்கிருந்து வெளியேறாத நிலையில், மணிகண்டனை கொம்பால் முட்டியது. இதில், மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். காயம் ஏற்பட்ட அவருக்கு ஆசனவாய் அருகே 8 தையல்கள் போடப்பட்டன. தற்போது, அவா் தொடா் சிகிச்சையில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.