கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

பா்கூா் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
Updated on
1 min read

பா்கூா் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள சிகரலப்பள்ளி, தெள்ளபெண்டா பகுதியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி (60). இவா், தனது பசுவை தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா். அப்போது, அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்தது.

இதுகுறித்து, சுப்பிரமணி, பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்துச் சென்று பொதுமக்களின் உதவியுடன் பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com