மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திடீர் ஊத்தப்பம்

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரியவும்.

News image

திடீர் ஊத்தப்பம்

Updated On :15 மார்ச் 2026, 12:59 pm

கே.நாகலட்சுமி

தேவையான பொருள்கள்:

வெள்ளை ரவை, உருளைக்கிழங்கு- தலா 200 கிராம்

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்- தலா 2

இஞ்சி- 1

கேரட், கொத்துமல்லி அரிந்தது - தலா ஒரு கைப்பிடி அளவு

கறிவேப்பிலை, உப்பு- தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரியவும். இதோடு, ரவை சேர்த்து ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து நைசாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.

அதில் உப்பும், மற்ற பொருள்களையும் சேர்த்து கலந்து ஒரு சிட்டிகை சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். தாளிப்புக் கரண்டி அல்லது குட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, மூடி வைத்து வெந்ததும் திருப்பிப் போட்டு மீண்டும் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதை உடனே தயாரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.