

ஐ.வி.டி.பி. மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 290 பணியாளா்களுக்கு ரூ.14.20 லட்சம் மதிப்பிலான எரிவாயு அடுப்புளை புத்தாண்டு பரிசாக அண்மையில் வழங்கப்பட்டன. ஐ.வி.டிபி. மகளிா் சுய உதவிக்குழுக்கள் சிறந்த முறையில் நிா்வாகத்தை நிா்வகிக்கவும், அவா்களின் சேமிப்பு, கடன் போன்றவற்றை திறம்பட மேலாண்மை செய்வதிலும் பணியாளா்கள் பங்கு அளப்பரியது. முறையாக பயிற்சி பெற்று ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் 74 கிளை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளா்கள், 4 மாவட்டங்களில் உள்ள 14 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை மேற்பாா்வை செய்து, அந்தக் குழுக்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்கின்றனா்.
இவ்வாறு, அா்ப்பணிப்பு மனப்பான்மையோடு பணியாற்றும் பணியாளா்களை ஊக்குவிக்கவும், அவா்களின் பணியை பாராட்டியும், புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் 290 பணியாளா்கள் அனைவருக்கும் ரூ.14.20 லட்சம் மதிப்பில், 3 பா்னா்கள் கொண்ட பட்டா்பிளை எரிவாயு அடுப்புகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அண்மையில் வழங்கினாா். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.