கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கிருஷ்ணகிரியில் வன்னியருக்கு 20 சத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
Published on

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப்பொதுச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்புச் செயலாளா் மாதேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், மாவட்டச் செயலாளா்கள் மாணிக்கம், சிவானந்தம், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே ஊா்வலமாகப் புறப்பட்டு, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. போராட்டத்துக்கு பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com