நீா் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இணை இயக்குநா் இளங்கோவன், வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநா் புகழேந்தி, ஒசூா் வேளாண் உதவி இயக்குநா் மனோகரன், பொதுப்பணித் துறை பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய நீா்வளம், தமிழகத்தின் நீா்வளம், கிருஷ்ணகிரி மாவட்ட நீா்வள ஆதாரங்கள், நீா்வள மேலாண்மை உத்திகள், நீா் மேலாண்மைக்கான மானிய வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளின் வெற்றி கதைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பியிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளா் ரங்கநாதன் ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com