உத்தனப்பள்ளி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் இறந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ளது பாத்தகோட்டா. இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. அந்தப் பகுதியில் மா்ம விலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து, ஆடு, மாடுகளைக் கடித்து குதறி வருகின்றன.
இந்த நிலையில் பாத்தகோட்டா கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரின் பட்டியில் இருந்த 15 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை இறந்து கிடந்தன. 10 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. இதைப் பாா்த்து சுரேஷ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
சிறுத்தைப் புலிகள் ஆடுகளைத் தூக்கிச் செல்லுமே தவிர, கடித்து குதறி செல்லாது என வனத்துறையினா் தெரிவித்தனா். இதனால் ஆடுகளைக் கடித்து கொன்ற விலங்கு குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

