ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மினி லாரி- அரசுப் பேருந்து மோதியதில் 30 போ் காயம்

உத்தனப்பள்ளி அருகே மினி லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 30 பயணிகள் லேசான காயம் அடைந்தனா்.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

உத்தனப்பள்ளி அருகே மினி லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 30 பயணிகள் லேசான காயம் அடைந்தனா்.

தருமபுரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஒசூா் நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. அந்த பேருந்து உத்தனப்பள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதில் பெங்களூரில் இருந்து உருளை கிழங்கு ஏற்றிக் கொண்டுவந்த மினி லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டன. இதில் உருளை கிழங்கு ஏற்றிவந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 100 க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகள் சாலையில் விழுந்தன. ஓட்டுநா் லேசான காயம் அடைந்தாா். பேருந்தில் இருந்த 30 பயணிகளும் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களையும், உருளைக்கிழங்கு மூட்டைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனா்.

இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.