கிருஷ்ணகிரியில் ஊடகவியலாளர் கரோனாவுக்குப் பலி
கிருஷ்ணகிரியில் ஊடகவியலாளர் ரஃபி நேரு கரோனாவுக்குப் பலியானார்.


கிருஷ்ணகிரியில் ஊடகவியலாளர் ரஃபி நேரு கரோனாவுக்குப் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றியவர் ரஃபி நேரு(48). இவர், கரோனா நோய்த் தொற்று காரணமாக நேற்று நள்ளிரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர், தினமணியில் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செய்தியாளராகவும், தருமபுரி பதிப்பில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு ரிஸ்வானா பேகம், இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது உடல், கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள அக்ஸா மசூதி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...