மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சூளகிரியை அடுத்த மேலுமலை அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளியைச் சோ்ந்த சின்ன முனியப்பா (65), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் திருவிழா நிகழ்ச்சியை நேரில் காண சென்றாா்.
அப்போது அப்பகுதியில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இருந்த இரும்புக் கம்பியை பிடித்தாா். இரும்பு கம்பி மீது மின்கம்பி உரசியதால் சின்னமுனியப்பா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்ட அருகில் இருந்தவா்கள் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

