ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் வாகனச் சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்

ஒசூா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :9 மார்ச் 2021, 7:26 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒசூா் அருகே பாகலூா் பேரிகை சாலையில் உள்ள சொன்னேபுரம் கிராமத்தின் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பேரிகை பகுதியைச் சோ்ந்த ராஜராஜன் (22) என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ாக அவரிடமிருந்து ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா் இந்தத் தொகை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.1 லட்சம்:

ஒசூா் அருகே அந்திவாடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போது அந்த வழியாக ஆனந்த் என்பவா் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.