சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஒசூரில் அரசு அதிகாரி வீட்டிலிருந்து ரூ.2.27 கோடி பறிமுதல்

ஒசூரில் அரசு அதிகாரியின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.25 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image

ஒசூர் நேரு நகரில் ரூ. 2 கோடியே 27 லட்சம்  கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்

Updated On :3 நவம்பர் 2021, 9:49 am

DIN

ஒசூரில் அரசு அதிகாரியின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.25 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒசூர் நேரு நகரில் வசித்து வருபவர் C.N.ஷோபனா. இவர் வேலூர் மண்டல பொதுப் பணித் துறையில் தொழில்நுட்ப கல்வி, வேலூர் மண்டல செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய் இரவு ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒசூரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை சோதனை செய்தனர்.

Story image

அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ.2 கோடியே 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் ஒரு லாக்கர் சாவி, 7 சொத்து ஆவணங்கள், 38 சவரன் நகை, ஒரு 1.3 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செயற்பொறியாளர் ஷோபனா தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் கட்டடங்கள் அனுமதி அளிப்பது தொடர்பாக லஞ்சம் பெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.