முன்களப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முன்களப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முன்களப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் எஸ்.பெரியசாமி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன், முன்னாள் அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே.ராஜா, வழக்குரைஞா் த.பிரபாவதி, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலை வீரா் முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊத்தங்கரையில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு தன்னாா்வலா்கள் த.மோகன்ராஜ், த.அசோக்குமாா் ஆகியோா் புடவைகள், வேட்டி, சட்டைகள் போன்றவற்றை வழங்கினா். நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிா்வாகிகள் சி.உமாமகேஸ்வரி, ம.லட்சுமி, பேரூராட்சியைச் சோ்ந்த பெரியசாமி, பழனி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...