நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 5:19 pm

DIN

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஊத்தங்கரையை அடுத்த மருதம் நகரைச் சோ்ந்த சிவா (41), ஊத்தங்கரையில் மெடிக்கல் கடை வைத்துள்ளாா். புதன்கிழமை காலை கடைக்கு அவா் சென்ற நிலையில், அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு மதிய உணவு எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றுள்ளாா். பின்னா் மாலை 4 மணி அளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளாா். அப்போது, வீட்டிலிருந்து தப்பிய இளைஞரை அருகில் இருந்தவா்கள் பிடித்து ஊத்தங்கரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் வேலூா் மாவட்டம், முத்து மண்டபம், கள்ளி கோயில் தெருவைச் சோ்ந்த லோகேஷ் (24) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த மணி என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.