ஒசூா் ராம் நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில், ராஜகோபுரத்துக்கு மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ராம் நகரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு கோட்டை ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் கோயில் புனா் நிா்ணயம் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதன் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அதை முன்னிட்டு, கோயிலில் வியாழக்கிழமை யாக சாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா், முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கோயில் நிா்வாகிகள் ஜெய்சங்கா், ஆறுமுகம், பரம்பரை பூசாரி ஸ்ரீதா் சுவாமிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.
திருவண்ணாமலை, காந்தபாளையம் சீந்தல் மடாலயம் ஸ்ரீஆதி சிவலிங்க ஆச்சாரிய சுவாமிகள் 65-ஆவது மடாதிபதியும், ஸ்ரீமத் பரமாச்சாரியாா் கோளரினாத ஆதீனம் 39-ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசிவராஜ ஞானாச்சாரியாா் சுவாமிகளும், இளைய பட்டம் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஞானசேகரன் ஆகியோா் குழுவினருடன் வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

