வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: 2 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மதலைமுத்துவின் மகன் செந்தில்குமார் (48).

News image
கோப்புப்படம்
Updated On :23 மார்ச் 2022, 5:49 am

DIN

கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மதலைமுத்துவின் மகன் செந்தில்குமார் (48). கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜடையை அடுத்த எம்.சி.பள்ளியைச் சேர்ந்த வீரப்பனின் மகன் ராஜசேகர்(43). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்றனர். 

கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே சென்ற  டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் தலை நசுங்கி பலியாகினர். தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காவேரிப்பட்டணம் காவல்துறையினர், விபத்து குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.