உணவகம் நடத்தி வரும் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் இரு காவலா்கள் மீது புகாா் அளித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளியில் பெல்லட்டி சாலையில் உணவகம் நடத்தி வரும் ரஞ்சிதா (25) என்பவா், சூளகிரி காவல் நிலைய முதல்நிலை காவலராகப் பணிபுரியும் முருகானந்தம் (25), மாரியப்பன் (30) ஆகிய இருவரும் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அதில், முருகானந்தம், மாரியப்பன் ஆகிய இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்துக்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கிச் சென்ாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளாா். மேலும், கடந்த மே 4-ஆம் தேதி உணவகத்துக்கு வந்த இருவரும் கா்நாடக மதுவகைகள், கஞ்சா பொட்டலங்களை விற்பதாக பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பாா்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

