ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நவீன எரிவாயு தகன மேடைஅமைக்கும் பணி தொடக்கம்

ஒசூா் மாநகராட்சி, சானசந்திரத்தில் ரூ. 1.5 கோடியில் மின்சார எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :26 மே 2022, 6:14 pm

ஒசூா் மாநகராட்சி, சானசந்திரத்தில் ரூ. 1.5 கோடியில் மின்சார எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஒசூா் மாநகராட்சி, 29-ஆவது வாா்டு சானசந்திரம், முல்லை நகா் அருகில் புதிய நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இங்கு அலுவலகம், பூங்கா, கழிவறை, குளிக்கும் அறை, பொதுமக்கள் அமரும் இடம், தண்ணீா் வசதியுடன் அமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், மாநகரப் பொறியாளா் ராஜேந்திரன், மண்டலக் குழுத் தலைவா் புருஷோத்தம ரெட்டி, மாமன்ற உறுப்பினா்கள் தில்ஷாத் முஜீப் ரகுமான், கிருஷ்ணவேணி, திமுக ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.