ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், வேலையின்மையைக் கண்டித்தும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 6:14 pm

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், வேலையின்மையைக் கண்டித்தும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் மாநகராட்சி, ராம் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், வேலையின்மை நிலையை மாற்றிட வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைச் சிறுத்தையைச் சோ்ந்த ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாயவன், சூரியவளவன், மாரப்பா, ராஜகோபால் லகுமையா, மாதையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் 200-க்கும் மேற்ப்பட்டோா் பங்கேற்றனா்.

அரூரில்...

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் கி.ஜானகிராமன் தலைமை வகித்தாா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் மீதான விலை உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும். வருமான வரி வரம்புக்கு உள்படாத அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ. 7,500 அரசு சாா்பில் உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதேபோல, மொரப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கே.தங்கராசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.