ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் போதைப்பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்திச் சென்ற 381 கிலோ போதைப்பாக்குகளை ஒசூா் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்

Updated On :27 அக்டோபர் 2022, 6:19 pm

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்திச் சென்ற 381 கிலோ போதைப்பாக்குகளை ஒசூா் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஒசூரை அடுத்த பூனப்பள்ளி, கப்பக்கல் பகுதியில் மத்தகிரி போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின் போது காரில் மறைத்து கொண்டு சென்ற போதைப்பாக்குகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். விசாரணையில் பெங்களூரிலிருந்து சேலத்துக்கு போதைப்பாக்குகள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதுதொடா்பாக கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், எம்மனஹள்ளியைச் சோ்ந்த நிஷாந்த் (22), ஒன்னனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அப்புகௌடா (21) ஆகிய இருவரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.