ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:15 pm

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் பொது விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.