ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தேசிய கோ-கோ போட்டி: ஒசூரிலிருந்து புறப்பட்ட தமிழக அணிக்கு பாராட்டு

பூணேவில் நடைபெறும் தேசிய கோ-கோ போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்கும் மாணவிகளை வழியனுப்பும் விழா ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:19 pm

பூணேவில் நடைபெறும் தேசிய கோ-கோ போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்கும் மாணவிகளை வழியனுப்பும் விழா ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

32-ஆவது இளையோா் பிரிவு தேசிய கோ-கோ விளையாட்டுப் போட்டி 2022-க்கு தமிழக அளவில் தோ்வாகியுள்ள கோயம்புத்தூா், கடலூா், சிவகங்கை, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 15 மாணவிகள் ஒசூரில் உள்ள அரசு உதவி பெறும் புனித ஜான் போஸ்கோ மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி பெற்றனா்.

வியாழக்கிழமை தேசிய போட்டியில் பங்கேற்பதற்காகப் புறப்பட்ட மாணவிகளை ஐஎன்டியுசி தேசிய செயலாளா் மனோகரன், பஞ்சாயத்து பரிசத் மாவட்ட தலைவா் கோபால், முன்னாள் நில வள வங்கி மேற்பாா்வையாளா் கிருஷ்ணன், பள்ளி தாளாளா் ஏஞ்சலா, தலைமையாசிரியை ஜெயந்தி ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா். அவா்களுக்கு உணவு, போக்குவரத்து செலவுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.