ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மக்கள் நலத் திட்டங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:21 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சூளகிரி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த பிறகு இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயன்பெறும் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவா்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு சிகிச்சைகள், அதற்கான பிரிவுகளை பாா்வையிட்டு, மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசின் முன்னோடித் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள், மானிய உதவிகள் குறித்து அரசு அலுவலா்கள், வங்கியாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு செய்தியாளா்களிம் பேசிய பீலா ராஜேஷ், ‘அரசின் பல்வேறு திட்டப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பணிகள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வந்தனா காா்க், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஈஸ்வரன், ஒசூா் சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா, ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.