ஒசூரில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி கனிம வளப் பிரிவு மண்டல இணை இயக்குநா் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள், பத்தலப்பள்ளி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் எம்.சாண்ட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.