ஒசூா் வழியாக கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் தினேஷ்குமாா் மற்றும் போலீஸாா் பெங்களூரு ஒசூா் தேசிய நெடுஞ்சாலை சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்தக் காரில் 149 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.96 ஆயிரத்து 600 ஆகும். புகையிலைப் பொருட்களையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அதை கடத்தி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம், கண்ணன்குடியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு அவற்றைக் கடத்த இருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

