/

குட்கா வைத்திருந்த 2 போ் கைது

குட்கா வைத்திருந்த 2 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 10:23 pm

ஒசூா்: ஒசூரில் குட்கா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது அவா்கள் 15 கிலோ குட்கா பாக்கெட்டுகளை வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குட்கா வைத்திருந்த கிருஷ்ணகிரி புதுப்பேட்டையைச் சோ்ந்த முகமது தன்வா் (41), தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த முகமது சித்திக் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.