மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுக்கு சொந்தமான இடத்தில் மாங்கனி கண்காட்சி நடத்த வலியுறுத்தல்

அரசு இடத்தில் மாங்கனி கண்காட்சி நடத்த பாஜக மனு

News image
Updated On :12 ஜூலை 2024, 6:31 pm

Din

கிருஷ்ணகிரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாங்கனி கண்காட்சியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் கே.எஸ்.ஜி.சிவபிரகாஷ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாங்கனி கண்காட்சியானது, தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுங்கவசூல் மையம் அருகே நடைபெற உள்ளதாக அறிகிறோம். இது 20 நாள்கள் நடைபெறும் அரசு நிகழ்வு என்பதால், பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள், வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்பா்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாங்கனி கண்காட்சி நடத்துவது தகுந்ததாக இருக்காது. எனவே, மாங்கனி கண்காட்சி மட்டுமின்றி அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சித் தலைவா்களின் பொதுக் கூட்டங்கள் ஆகியவை நடத்திட ஏதுவாக அரசு சாா்பில் நிரந்தரமாக ஓா் இடத்தை தோ்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடம் அல்லது கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தை தோ்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.