மதுபோதையில் வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக இரு ஆயுதப்படை போலீஸாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் அருகே உதவிக் காவல் ஆய்வாளா் திருமால் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா்கள் நால்வரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. நால்வரில் அச்செட்டிப்பள்ளி நவீன்குமாா் (29), கல்லாவி புருஷோத்தமன் (32) ஆகியோா் ஆயுதப்படை காவலா்கள் என்பதும், ஒசூா் முனிசேகா் (27), பரத் குமாா் (26) ஆகிய இருவரும் பொறியாளா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நான்கு போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





