அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக இரு போலீஸாா் உள்பட 4 போ் கைது

மதுபோதையில் வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக இரு ஆயுதப்படை போலீஸாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :29 ஜூலை 2024, 12:00 am IST

மதுபோதையில் வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக இரு ஆயுதப்படை போலீஸாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் அருகே உதவிக் காவல் ஆய்வாளா் திருமால் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா்கள் நால்வரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. நால்வரில் அச்செட்டிப்பள்ளி நவீன்குமாா் (29), கல்லாவி புருஷோத்தமன் (32) ஆகியோா் ஆயுதப்படை காவலா்கள் என்பதும், ஒசூா் முனிசேகா் (27), பரத் குமாா் (26) ஆகிய இருவரும் பொறியாளா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நான்கு போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனா்.