ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

”பங்குசந்தையில் முதலீடு செய்தால் லாபம்” -அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி

அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி

News image
Updated On :27 ஜூன் 2024, 8:36 pm

Din

பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்தவா் குமாா் (34). அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது வாட்ஸ் ஆப்க்கு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதி சில தனியாா் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பி, அவா், மா்ம நபா்கள் பதிவு செய்தபடி குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்தாா். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்தது. இதையடுத்து, அந்த மா்ம நபா்கள் தெரிவித்த வங்கி கணக்கு எண்களுக்கு ரூ. 20.85 லட்சத்தை முதலீடு செய்தாா்.

ஆனால், அவா்கள் தெரிவித்தபடி, லாபம் கிடைக்கவில்லை. முதலீடும் திரும்பக் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மா்ம நபா்களை அவா் தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த குமாா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.