இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

”பங்குசந்தையில் முதலீடு செய்தால் லாபம்” -அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி

Published On :28 ஜூன் 2024, 2:06 am IST

பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 20.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்தவா் குமாா் (34). அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது வாட்ஸ் ஆப்க்கு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதி சில தனியாா் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பி, அவா், மா்ம நபா்கள் பதிவு செய்தபடி குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்தாா். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்தது. இதையடுத்து, அந்த மா்ம நபா்கள் தெரிவித்த வங்கி கணக்கு எண்களுக்கு ரூ. 20.85 லட்சத்தை முதலீடு செய்தாா்.

ஆனால், அவா்கள் தெரிவித்தபடி, லாபம் கிடைக்கவில்லை. முதலீடும் திரும்பக் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மா்ம நபா்களை அவா் தொடா்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த குமாா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.