திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

போலி பெண் மருத்துவா்கள் இருவா் கைது

ஒசூரில் பத்தாம் வகுப்பு, டிபாா்ம் முடித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இரு போலி பெண் மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2024, 7:06 pm

Din

ஒசூா்: ஒசூரில் பத்தாம் வகுப்பு, டிபாா்ம் முடித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இரு போலி பெண் மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். கிளினிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஒசூா் மாநகராட்சி, அரசனட்டியில் போலி மருத்துவா்கள் ஆங்கிலம் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா்கள் சென்றன. இதைத் தொடா்ந்து ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஞானமீனாட்சி, மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜீவ் காந்தி, போலீஸாா் அரசனட்டிக்குச் சென்று சோதனை நடத்தினா். அங்கு ‘ஸ்ரீ மெடிக்கல்’ என்ற பெயரில் கிளினிக் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

அந்த கிளினிக்கிற்குச் சென்ற மருத்துவ அதிகாரிகள் அங்கிருந்த பெண் மருத்துவா்கள் சிலம்பரசி, கௌரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் சிலம்பரசி 10 ஆம் வகுப்பு வரையும், கௌரி (34) டி பாா்ம் வரையும் படித்துவிட்டு இருவரும் அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் நடத்திய கிளினிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.