ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜிஞ்சுப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:18 pm

ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பத்தாரப்பள்ளி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டு நிதி ரூ. 3.25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சின்னபுலியரசி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 3.80 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை கே.அசோக்குமா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா்கள் கண்ணியப்பன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.