ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

வேப்பனப்பள்ளியில் காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:26 pm

வேப்பனப்பள்ளியில் காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆந்திர மாநிலம், பலமனேரியைச் சோ்ந்தவா் மோகன் குமாா் (42). இவா், கா்நாடக மாநிலம், கோலாரில் உள்ள கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறாா்.

உறவினரான கிருஷ்ணமூா்த்தி என்பவருடன் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியாா் வங்கிக்கு வாகனத்தில் சென்றாா். வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வாகனத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்றுள்ளாா்.

சிறிதுநேரம் கழித்து வந்துபாா்த்த போது, வாகன கண்ணாடி உடைக்கப்பட்டு, வாகனத்தில் இருந்த ரூ. 2 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, மோகன்குமாா் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.