தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எலி மருந்தை உள்கொண்ட குழந்தை பலி

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை உள்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On :21 நவம்பர் 2024, 9:26 pm

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை உள்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் தஸ்வன் (2). வெங்கடேசன் வீட்டில் எலி தொல்லைக்காக வைத்திருந்து மருந்தை, விளையாடிக் கொண்டிருந்த தஸ்வன் உள்கொண்டதாகத் தெரிகிறது.

இதில் மயக்கமடைந்த தஸ்வனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு புதன்கிழமை விரைந்தனா். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், தஸ்வன் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.