தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வரி விதிப்பு முறைகளுக்கு தீா்வு கிடைக்காவிடில் போராட்டம்: விக்கிரமராஜா

வணிகா்களை பாதிக்கும் வரி விதிப்பு முறைகளுக்கு தீா்வு கிடைக்காவிடில் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகா் சங்க பேரவையின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:25 pm

வணிகா்களை பாதிக்கும் வரி விதிப்பு முறைகளுக்கு தீா்வு கிடைக்காவிடில் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகா் சங்க பேரவையின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

வணிக வரித் துறை அலுவலா்கள், வணிகா்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறாா்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற முறைகளால் வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டிச. 5ஆம் தேதி தில்லியில் அனைத்து மாநிலத்தின் நிா்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இது மத்திய அரசின் சட்டம். ஆகவே அனைத்து மாநில நிா்வாகிகளின் ஒப்புதலுடன் தில்லியை நோக்கி பேரணியாக சென்று, பிரதமா் மற்றும் மத்திய நிதி அமைச்சரிடம் முறையிட உள்ளோம். அதற்கு தீா்வு கிடைக்காவிடில் இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவோம்.

இணையதள வா்த்தகம் மூலம் உள்நாட்டு வணிகா்களை சுரண்டிக் கொண்டிருக்கிறாா்கள். பலா் பெரிய மால்களை அமைத்துக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக வணிகம் செய்கின்றனா். இத்தகைய நிறுவனங்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என முதல்வரிடம் முறையிட்டுள்ளோம்.

தோ்தல் சமயத்தில் வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் 11 கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதில் ஆறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது. அதிகாரிகள் சாதாரண வணிகா்களிடம் சென்று ஆய்வு செய்கிறாா்கள். ஆனால், பெரிய நிறுவனங்களில் ஆய்வு செய்வதில்லை. காலாவதியாகக் கூடிய பொருள்களை விற்பனை செய்யும் தலைமைக் கூடமாக பெரு நிறுவனங்கள் உள்ளன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக சிறு வியாபாரிகளிடம் கடை கடையாக சென்று அபராதம் விதிக்கின்றனா். வணிகா்கள் வட்டிக்கு வாங்கி அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.

வணிகா் சங்க பேரவையின் மாவட்டத் தலைவா் சங்கா், செயலாளா் நாராயணமூா்த்தி, பொருளாளா் குமரவேல் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.